
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று(21.08) விசேட உரையாற்றிய கருணாதாச கொடித்துவக்கு இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கருணாதாச கொடித்துவக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.