கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு  

கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு  

கொழும்பு, கல்கிசை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிசை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நேற்று(01.09) இந்த சம்பவம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாக 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி வழங்கி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பு, தெமடகொட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply