ஒரே நாடு, ஒரே நீதி, ஒரே குரல் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

ஒரே நாடு, ஒரே நீதி, ஒரே குரல் - பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

தாய் நாட்டின் சுபீட்ஷமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டுமென பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்,

நேற்று (05.09) மன்னார் பேருந்து நிலையத்தில், மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஜனசெத முன்னணியின் தலைவரும்

 ஜனாதிபதி பொது வேட்பாளருமான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 

“இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாஸவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர், அந்த ஒப்பந்தங்களில் என்ன உள்ளது என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 

அது மாத்திரமல்ல ரணில் விக்ரமசிங்க, அனுர குமார , நாமல் ராஜபக்ஸ, தீலித் ஜயவீர போன்றவர்களுடன் மேற்கொண்ட உடன்படிக்கைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்

வடமாகாணத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு இதுவரை எந்த  தீர்வும் எட்டவில்லை அப்பாவிப் பொதுமக்களை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள் எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தங்கள் வாக்குகளை டிரக்ரர் சின்னத்துக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

ரோகினி நிஷாந்தன் – மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply