பிபில பகுதியில் கோர விபத்து

பிபில பகுதியில் கோர விபத்து

மொனராகலை, பிபில நாகல பிரதேசத்தில் 2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு (06.09) இடம்பெற்றுள்ளது.

 பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும்,  அதே திசையில் பின்னால் சென்ற பஸ்ஸும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிபில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், ஊழியர்கள் 

இறங்குவதற்காக நின்ற போது மற்ற பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Social Share

Leave a Reply