யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது – திலித்

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது - திலித்

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டத்தையே தான் முன்வைத்துள்ளதாக தெரிவித்த சர்வஜன அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர
வாக்குறுதிப் பத்திரத்தை தான் முன்வைக்கவில்லையென கூறியுள்ளார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இது வெறுமனே வாக்குறுதிப் பத்திரம் அல்ல. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில்
இவ்வாறானதொரு மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவை என நான் நினைக்கிறேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் இலங்கை எவ்வாறு உருவாகும் என்பதையும் எமது கொள்கைப் பிரகடனம் விபரிக்கிறது.

ஏமாற்று அரசியலுக்கு எதிராக உங்கள் மனதில் உள்ள வெறுப்பையும் கோபத்தையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.
அதற்காக அன்பின் அடையாளமான நட்சத்திரத்தின் முன் வாக்களியுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply