தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தலா?

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தலா?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என
தெரிவித்து பொலிஸார் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் காலங்களில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply