அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகுவதாக அரச ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச தொழிற்சங்க சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு குறைந்தது 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த கொடுப்பனவை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அச்சம்மேளனம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version