கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இலக்காகிய நபர் உயிரிழப்பு

கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இலக்காகிய நபர் உயிரிழப்பு

கல்கிசை – படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15.09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

கல்கிசை – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply