தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? அறிக்கை வெளியீடு

தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? அறிக்கை வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு வவுனியாவிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (16.09) இடம்பெற்றது.

அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகத் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply