கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாட்டில் சுமார் 35 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, புத்தளம், கொழும்பு ஆகிய பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதே சமயம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு கலவையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சான்று பகிர்ந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
