இலங்கை மீனவர்கள் மூவர் இந்திய அதிகாரிகளால் கைது

இலங்கை மீனவர்கள் மூவர் இந்திய அதிகாரிகளால் கைது

இராமேஸ்வரம் அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினரால் நேற்று(17.09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்து பயிற்சியின் போது, படகொன்றிலிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நெடுங்குளத்தை சேர்ந்த ஆர்.நிரோஷன் (34), தாளையடியைச் சேர்ந்த டி.பாலா ரமேஷ் (37) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பி.புலைகுமார் (44) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply