வடக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டிய சஜித் மற்றும் அரிய நேத்திரன்

வடக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டிய சஜித் மற்றும் அரிய நேத்திரன்

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளால் வெற்றிப் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்பொது வேட்பாளர் 116,688 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

யாழ் மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 84,558 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பல தேர்தல் தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருப்பதை காணமுடிகின்றது.

யாழ் மாவட்டத்தில் அனுரகுமார திசாநாயக்க 27,086 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply