அனுரவின் பதவிப் பிரமாணம் குறித்து கட்சியின் அறிவிப்பு

அனுரவின் பதவிப் பிரமாணம் குறித்து கட்சியின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் பதவிப் பிரமாணம் குறித்து தேசிய மக்கள் சக்தி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்புவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் எளிமையாகக நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என கூறிய அவர் தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply