
பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவி விலகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47 (2) ஆவது சரத்தின் பிரகாரம் தனது பதவியிலிருந்து விலகுவதாக
தினேஸ் குணவர்தன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.