
கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து வீழ்ந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.