
நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜா தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.