பன்றிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

பன்றிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளைக் கொண்டுசெல்வது இன்று(18.10) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

பன்றிகள் இடையே பரவும் வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply