கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு - மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக
ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10) இந்த விபத்து சம்பவித்தது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், ரயிலின் எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்ததுடன் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன.

Social Share

Leave a Reply