சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து – மூவர் பலி

சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து - மூவர் பலி

புத்தளம் மாவட்டம், சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து நேற்று (19.10) இரவு இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் 42 வயதுடைய தந்தை, 40 வயதுடைய தாய் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply