குடாவெல்ல துறைமுகத்தில் தீ விபத்து – 3 படகுகளுக்குச் சேதம்

குடாவெல்ல துறைமுகத்தில் தீ விபத்து - 3 படகுகளுக்குச் சேதம்

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.

‘துஷானி’ என்ற மீன்பிடி படகில் இன்று (21.10) காலை தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் குறித்த படகுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மீன்பிடி படகு உள்ளிட்ட சிறிய படகொன்றும் சேதமடைந்துள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply