நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை(23.10) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(22.10) அறிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை முன்னிலையாக வாக்குமூலம் வழங்கத் தயார் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு தனியார் ஹோட்டல் வாகன தரிப்பிடதிலிருந்து BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட குறித்த காரை பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10ம் திகதி முன்னாள் அமைச்சருக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சருக்கு குருநாகல் பொலிஸார் அறிவிப்பு விடுத்திருந்த போதும், அவர் இன்று வரை வாக்குமூலம் வழங்கியிருக்க வில்லை.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை(23.10) முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply