இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம்

இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம்

தற்போதைய தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக வாகனத்தின் மூலம் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று முதல் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவலை மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் ஒரு தேங்காய், வாடிக்கையாளர்களுக்கு 100 முதல், 120 ரூபாய் வரை வழங்க
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply