ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (23.10) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply