
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (06.11)
இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது தொடபில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் போது உரிய தீர்மானம் எடுக்கப்படும்” என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.