யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.