இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு பூர்த்தி

இலங்கை கடற்படை இன்று (09/12) தனது 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகிறது.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்று கடற்படை சட்டம் இயற்றப்பட்டு ரோயல் சிலோன் கடற்படை உருவாக்கப்பட்டது.

1972ஆம் ஆண்டின் முதலாவது அரசியலமைப்பின் பிரகாரம் ரோயல் சிலோன் கடற்படையானது ‘இலங்கை கடற்படை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இலங்கையின் 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் கொவிட் சுகாதார வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசேட அம்சமாக இலங்கை கடற்படையினருக்குச் சொந்தமான கப்பல்களை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கமைய காலி முகத்திடலுக்கு வருகை தந்து கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு பூர்த்தி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version