வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.25 அளவில் பெண் ஒருவர் ரயிலில் மோதி மரணமாகியுள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. இறந்தவர் யாரெனெ இதுவரையில் அவருக்கு இனம் காணப்படவில்லை. இறந்தவரின் உடல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் இறந்தவரின் கைப்பையும், பாதணிகளும் காணப்படுகின்றன.