இராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் விபத்து

ஹெலி விபத்தில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் சடலங்களை சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெலிங்டனிலிருந்து சூலூருக்கு புறப்பட்டுச் சென்ற அம்பியூலன்ஸ் வாகனமொன்று மேட்டுப்பாளையம் அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரரொருவரின் சடலம் மற்றுமொரு அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் விபத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version