பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கு கடின வெற்றியிலக்கு

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரி அணிகளுக்கிடையிலான 14 ஆவது இந்துக்களின் சமர் நேற்று(07.02) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள். இதுவே இறுதி நாள். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யாழ் இந்து கல்லூரி அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் A.விதுஷன் 49(75) ஓட்டங்களையும், K. பரசித் 20(27) ஓட்டங்களையும் பெற்றனர்.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பந்துவீச்சில் V. யுவராஜ் 4 விக்கெட்களையும், தேஸ்கர், ஸ்ரீ நிதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் T. சந்தோஷ் 42 ஓட்டங்களை பெற்றார்.

யாழ் இந்து கல்லூரி பந்துவீச்சில் நிதீஷ் 4 விக்கெட்களையும், சுதர்ஷன் சுபர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய யாழ் இந்து கல்லூரி அணி 54 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதன் மூலம் பம்பலப்பிட்டி அணிக்கு வெற்றி பெற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமநிலையில் நிறைவு செய்யும் வாய்ப்புள்ளது. யாழ் இந்து கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் பரேஷித் 39 ஓட்டங்களையும், ஸ்ரீவத்சன் 26 ஓட்டங்களையும், விதுஷன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் அபிவர்ணன் ஆட்டமிழக்கமால் 27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version