பிமல் ரத்நாயக்கவும் ரவூப் ஹக்கீமுக்கும் நாடாளுமன்றில் வாக்குவாதம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று (27.02) வாக்குவாதம் ஏற்பட்டது.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தான் உட்பட பல கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டோம்.

ஜனாதிபதி தன்னை நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழுவில் இணைத்துக் கொள்ளவதாக உறுதியளித்திருந்தார்

ஆனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்கவில்லை” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவரின் குற்றச்சாட்டையும் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version