இறுதி ஊர்வலம் ஆரம்பம்

ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமடைந்த இந்திய தலைமை முப்படை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்பொழுது இடம்பெற்று வருகிறது.

முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று (10/12) அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தூதரக அதிகாரிகள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அதற்கமைய தற்சமயம் அவரது உடல் இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரார் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதி ஊர்வலம் ஆரம்பம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version