நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துத் சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் முழக்கங்களில் ஒன்றாகும்.
மேலும் புத்தாக்கம் மற்றும் உயர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “டிஜிட்டல் பொருளாதாரத்தை” அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக குறிப்பிடப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் மூலம் முதன்மை நோக்கம் அதுவல்ல என்று தெரிகிறது. எனவே, நான் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன், சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
- இலங்கையில் காணப்படும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் எப்போது திருத்த எதிர்பார்க்கிறது? இச்சட்டம் திருத்தப்படும் வரை இச்சட்டத்தை வலுவற்றதாக மாற்றுவீர்களா? அவ்வாறு இல்லை என்றால், ஏன்? இந்த சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அல்லது முழுவதுமாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன?
- இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களில், எத்தனை சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் எத்தனை குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?
- முன்மொழியப்பட்டுள்ள வருமான வரித் திருத்தச் சட்டத்தின் மூலம் தகவல் தொழிநுட்பம் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணிக்கு 15% வரியை ஏப்ரலில் இருந்து விதிக்க அரசாங்கம் யோசனை முன்வந்துள்ளதோடு, இந்த வரியால் சேவை ஏற்றுமதித் துறையில் எத்தனை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது? இதனால், ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வரிப்பணத் தொகை எவ்வளவு?
- இந்த வரிகளை வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ள இதுவரை திட்டம் எதனையும் அரசாங்கம் முன்வைத்துள்ளதா? ஆம் என்றால் அது யாது? இல்லை என்றால் ஏன் இல்லை?
- இந்த வரி விதிப்பால், ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதாரத்தையும், மாற்று பணமோசடி முறைகளின் மீது ஏற்படுத்தும் உத்வேகம் தொடர்பில் அரசாங்கம்
மேற்கொண்ட ஆய்வுகளை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.