சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01.04) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல்
உத்தரவு நீடிக்கப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version