இரு தினங்களுக்கு மின்வெட்டு

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றைய தினம் (13/12) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பிரதேங்களில் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில், மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, அதனை மீள இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளைய தினமும் (14/12) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு மின்வெட்டு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version