இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டி இங்கிலாந்து, லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
விராத் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலைக்குயில் சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லோகேஷ் ராகுல், யஷாஸ்வி ஜய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். மூன்றாமிடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார். சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி நீண்ட காலமாக பிடித்து வைத்திருந்த இடத்தை சுப்மன் கில் பெற்றுள்ளார். தொடர்ந்து வரும் இடங்களில் ரிஷாப் பாண்ட், கருண் நாயர், ரவீந்தர் ஜடேஜா, ஷர்டூல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி சார்பாக ஷக் க்ரௌலி, பென் டக்கட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், ப்ரய்டன் கார்ஸ், ஜோஷ் டொங், சொஹைப் பஷீர் ஆகியோர் விளையாடுகின்றனர்.