அனுராதபுரத்தில் துப்பாக்கி சூடு – இளைஞர் படுகாயம்!

அனுராதபுரம், திருப்பனே, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (25.06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் நபர் தற்போது அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திரப்பனே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply