பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன், அக்தர் மெங்கல், பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்து, சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலுசிஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version