சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12.09) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை அழித்ததற்காக இழப்பீடாக ரூ. 8,850,000 ஐ சட்டவிரோதமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version