இன்றைய வானிலை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டை விட்டு விலகிச் செல்லும் நிலையில் இருப்பதால், கடந்த நாட்களாக காணப்பட்ட பலத்த மழை நிலைமை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை நேரங்களிலும் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனுடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கம் மற்றும் காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply