நுவரெலியாவில் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

தபால்துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மலையகத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் என சகலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

நேற்று (14/12) மாலை முன்னெடுக்கப்பட்ட இத்தொழிற்சங்க நடவடிக்கையானது, இன்றும் (15/12) தொடர்வதால், சில பிரதான மற்றும் உப தபால் நிலையங்களில் உள்ள பொதிகளும் பல முக்கியமான அவசர கடிதங்களும் விநியோகிக்கப்படாது தேங்கி கிடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத் தபால் அலுவலகங்களிலும் முக்கியமாக நுவரெலியா மாவட்ட பிரதான தபால் அலுவலகத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருவதால் அங்கு வருகை தந்த பெரும்பாலான மக்கள் சேவை முடக்கத்தின் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version