”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துங்கள்” – நாமல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாகவும், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்துவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

திங்கட்கிழமை (20.04) கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய நாமல், இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்ட தேசியப் பட்டியல் பிரமுகர் உட்பட, தாக்குதல்களுக்கு நிதியளித்த அம்சங்களுடன் தொடர்புடைய நபர்கள் பாதுகாக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் அதிகாரிகள் மற்றவர்களைத் தொடர்ந்து குறிவைப்பதாகவும் கூறினார்.

விசாரணையில் உள்ள முரண்பாடுகளை அவர் விமர்சித்ததுடன், தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் கைது செய்யப்பட்டதையும், அதே நேரத்தில் ஒரு தனிப்பட்ட கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நாமல், குறித்த விசாரணைகளை நடத்துபவர்களின் நம்பகத்தன்மையையும் மேலும் கேள்விக்குள்ளாக்கினார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட முக்கிய புலனாய்வு எச்சரிக்கைகள், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்தைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தத்துடன், குற்றவாளிகளுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் மீதே பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

சொத்துக்களை விடுவிப்பதும், தாக்குதல்களுக்கு நிதியுதவி அளித்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவதும் விசாரணையின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளதுடன், மேலும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version