விபரீதத்தில் முடிந்த காணொளி

தனது தோழியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலையில் காண்பித்த இளைஞரொருவர் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16/12) மாலை யாழ்ப்பாணம் – நாச்சிமார் வீதியில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 31 வயதுடைய வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தான் தங்கியிருக்கு அறையில் கதிரையில் ஏறி கூரையில், கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது தோழிக்கு நேரலை மூலமாக அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். இதன்போது கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்து வரும் நிலையில், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

(யாழ் நிருபர்)

விபரீதத்தில் முடிந்த காணொளி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version