சம்பந்தன் இராஜினாமா – போலியான செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான செய்திகள் போலியான செய்திகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைகளின் படி அவருக்கு ஓய்வு தேவை என கூறியுள்ளதாகவும், அதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை சம்பந்தன் MP இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இந்த செய்தி தொடர்பாக இரா.சம்பந்தனின் பிரத்தியோக செயலாளரை தொடர்புகொண்டு கேட்ட போது “அவ்வாறான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. யாரோ போலியான இந்த செய்தியினை கிளப்பி விட்டுள்ளார்கள். இந்த செய்தியினை அறிந்து சம்பந்தன் MP உடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு எந்த தீர்மானங்களும் எடுக்கவில்லை என தனக்கு தெரிவித்தாக” செயலாளர் வி மீடியாவுக்கு உறுதி செய்தார்.

சம்பந்தன் இராஜினாமா - போலியான செய்தி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version