‘பட்டதாரிகளின் செயற்பாடு சிறந்த நடவடிக்கையாகும்’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள், பட்டமளிப்பு விழாவின் போது எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன்னுதாரணமானது என்பதோடு அது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என ஓமல்பே சோபித தேரர் நேற்று (19/12) தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது சுயமரியாதையை வெளிக்காட்டியுள்ளதாகவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் தெரிவித்தார்.

அத்துடன் இதனை மகாநாயக்கர்கள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலானவர்கள் வாயை மூடி மறைந்து பேசினாலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவரையான தனது செயற்திட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை ஜனாதிபதி இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் .

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் முருத்தொட்டுவே ஆனந்த தேரரிடம் பட்டங்களை பெற மறுத்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு கூறினார்.

பட்டமளிப்பில் பல்கலைக்கழ வேந்தரை புறக்கணித்த மாணவர்கள்
‘பட்டதாரிகளின் செயற்பாடு சிறந்த நடவடிக்கையாகும்'
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version