12 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து நேற்று (19/12) மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (18/12) ஏற்கெனவே 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 12 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று கைதான மீனவர்களிடமருந்து 2 இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை முன்னெடுத்து வரும் விசேட சுற்றிவளைப்பு திட்டத்தின் கீழ், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 43 மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 இந்திய மீனவர்கள் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version