1998/- க்கு நிவாரண பொதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று (19/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதற்கமைய நிவாரண பொதி விநியோகத்திற்கான நடமாடும் சேவை இன்று (20/12) முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் பெருந்தொற்று காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி மற்றும் பொருட்கள் விநியோகத்திற்கான கட்டணம் அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துள்ளமையால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகை காலத்தை கருத்திற்கொண்டு, 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு சதோச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version