பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான ஸ்மார்ட் வகுப்பறை கையளிக்கப்பட்டது.
அதற்கமைய புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை இன்று (21/12) காலை கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலைக்கு நேற்று (20/12) கள விஜயம் மேற்கொண்ட சுரேன் ராகவன், வைத்தியசாலையின் நிலவரம் குறித்து ஆராய்ந்தார்.
