வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் பலி

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்றை நேற்று (26/12) ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version