மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சார்பாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் இந்த அழைப்பை மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் விடுத்துள்ளார்.

கடந்த வாரம், மனோ எம்.பிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணை சிங்கள மொழியில் கிடைக்கப் பெற்றிருந்தமையால், அதனை தமிழ் மொழியில் அனுப்பும் பட்சத்தில் ஆணைக்குழுவுக்கு வருகை தருவதாக மனோ எம்.பி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மனோ கணேசன் எம்.பியை இம்மாதம் 29ஆம் திகதியன்று விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி, தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோ எம்.பியின் இல்லத்துக்கு, அவ்வலய பொலிஸ் நிலையம் மூலம் ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் அனுப்பி வைத்துள்ளார்.

மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை

Social Share

Leave a Reply