கிளி. சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28/12) இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்டப் பிரதானிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்பார்ப்புக்களை வெளியிட்டதுடன், இதுவரை நாட்களும் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் மற்றும் அசளகரியங்கள் குறித்து அமைச்சரிடம் தெரியப்படுத்தினர்.

கிளி. சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version